அரியலூர்,ஆக.14: அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். காவல், தீயணைப்பு, தேசிய மாணவர் படையினரின் கண்கவர் அணிவகுப்புகளும், பள்ளி மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதையொட்டி சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர காவல், ஆயுதப்படை காவல் துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மாணவிகள் நடனங்களை ஆடினர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.