×

விவசாயிகள் மகிழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

பெரம்பலூர்,ஆக.14:  பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்றங்களின் தனி அலுவலர்களால் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) சுதந்திரதினத்தன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்றங்களின் தனிஅலுவலர்களால் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவித்தல், கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராமசபையில் வாசித்தல் வேண்டும். அனைத்து ஊராட்சி மன்றங்களின் தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடு களை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும்.  அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவையென்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். நாளை நடைபெறும் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கிராமசபை கூட்டம் நல்லமுறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராமசபை கூட்டம் நடை பெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது