×

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்

அரியலூர்,ஆக,14: அரியலூர் மாவட்டம் திருமானூரில் கொள்ளிட ஆற்றில் மேட்டூர் அணை முழு  கொள்ளளவு அடைந்ததையடுத்து தற்போது காவிரியில் 1 லட்சத்து 25 அயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டப்படுகிறது. இதையொட்டி திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்தண்ணீர் நேற்று இருகரையும் தெட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதி விவசாய மக்களும், பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதி விவசாயிகள்  கூறுகையில், கொள்ளிட ஆற்றில்  சிறுசிறு தடுப்பணைகள் கட்டியிருந்தால் இப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்கும். பல முறை மாவட்ட நிர்வாகம், எம்எல்ஏ, அமைச்சரிகளிடம் முறையிட்டும் இப்பகுதிகளில் தடுப்பணைகளை கட்ட முன்வரவில்லை. ஆனால் தற்போது கொள்ளிட ஆற்றில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுகிறது. யாருக்கும் பயன் பெறாமல் இத்தண்ணீர் வீணாகிபோகிறது என்று விவாசாயிகள் கூறினர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது