×

பலப்படுத்தும் பணி தீவிரம் தஞ்சையில் 17ம் தேதி மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்

தஞ்சை, ஆக. 14: தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2, 3, 4 சக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம், ஆயுதப்படை மைதானத்தில் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்காக காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாகனங்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 17ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ரூ.1,000த்தை முன்வைப்பு தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதம், 4 சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டிவரி 18 சதவீதம் விற்பனை வரி தொகையையும் சேர்த்து ஏலம் நடந்த அன்றே செலுத்த வேண்டும். இவ்வாறு எஸ்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...