×

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

பேராவூரணி, ஆக. 14: பேராவூரணி மற்றும் பூக்கொல்லை கடைவீதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேராவூரணி இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சமூக ஆர்வலர் சேக் இப்ராகிம் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர்  ஜனார்த்தனன் பேசுகையில், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா கொண்டு வந்து கொடுக்கும் மொத்த வியாபாரியை பிடிக்க பொதுமக்கள், காவல் துறையினருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார். முகாமில் போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள், பெண்கள், கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...