×

கஞ்சா விற்க முயன்றவர் கைது

கரூர், ஆக.14: கரூர் வெங்கமேடு அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் வெங்கமேடு காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெங்கமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற என்எஸ்கே நகரைச் சேர்ந்த கந்தசாமி(37) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.1500 மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு