×

வேதாரண்யத்தில் ஆடு திருடியவர் கைது

வேதாரண்யம், ஆக.14:  வேதாரண்யம் சன்னதி தெருவை சேர்ந்தவர் தனம் (70). இவர் தனது வீட்டு கொல்லையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
இரவு சென்று பார்த்தபோது ஆட்டை காணவில்லை. தனது  பேரனுடன் ஆட்டை தேடி சென்ற போது செம்போடை அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தவறிவிழுந்ததை பார்த்த போது தனது ஆடு என்று தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடித்து விசாரித்த போது அவர் காரைக்காலை சேர்ந்த உதுமான்ஆரிப் (44) என்பது தெரியவந்தது. இது குறித்து தனம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடி சென்ற உதுமான் ஆரிபை கைது செய்து, அவரிடம் இருந்து  ஆடு திருடுவதற்கு பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து