×

கருணாநிதி மறைவையொட்டி மன்னார்குடியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம்

மன்னார்குடி, ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதி மறைவைெயாட்டி மன்னை வட்டார அரசு பள்ளி  ஆசிரியர்கள் சார்பில் மன்னார்குடியில் அமைதி ஊர்வலம்  மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைப் பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதை முன்னிட்டு மன்னை வட்டார அரசு பள்ளி  ஆசிரியர்கள் சார்பில் ஏராளமான ஆசிரியர்கள்  மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணியாக அமைதி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை வரை சென்றனர்.

பின்னர், புகழஞ்சலி கூட்டம் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் செந்தமிழன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆசிரிய கூட்டணி மாவட்ட தலைவர் முரளி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுவிக்கின் ராஜ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட மகளிரணி செயலாளர் ஆனந்தவள்ளி, பதவி உயர்வு பெட்ரா பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட ஆலோசாகர் ஆண்ட்ருஸ் ஆகியோர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பேசினர். பின்னர்,அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...