×

குடும்பத்துடன் தரிசனத்திற்கு வேனில் வந்தவர்கள் நூதன முறையில் கோயிலில் ரூ.40ஆயிரம் பொருட்கள் திருட்டு

திருத்துறைப்பூண்டி, ஆக.14: திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்தவர்கள் கோயிலில் உள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை  நூதன முறையில் திருடி சென்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி சாத்தங்குடி சாலையில் கிராம கோயிலான கண்ணாயிரமூர்த்தி ஐயனார் கோயில் உள்ளது.இந்த கோயிலுக்கு நேற்று முன் தினம் ஒரு ஆம்னி வேனில் குடும்பத்துடன் வந்துள்ளார்கள், வந்தவர்களிடம் கிராம மக்கள் விசாரித்தனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 1008 கோயில்களை சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி இப்போது இந்த கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்துள்ளோம் என்றனர்.

பின்னர் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கோயில் மணி, குத்துவிளக்கு, குடம் போன்ற வெங்கல பொருட்களும், ஆம்ளிபயர் என ரூ 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை நூதன முறையில் திருடி சென்று விட்டனர். மாலை கோயிலுக்கு சென்று பார்த்த போது திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி நாகலிங்கம்(60) கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்