கரூர், ஆக.14: கரூர் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளின்படியும், லைசென்சு, பர்மிட் விதிகளின் படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.