×

திரளான பக்தர்கள் தரிசனம் மன்னார்குடியில் மாணவர்களுக்கான அகில இந்திய திறனாய்வுத் தேர்வு

மன்னார்குடி, ஆக. 14: 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ  மாணவிகளுக்கான அகில இந்திய திறனாய்வுத் தேர்வு மன்னார்குடியில் நடைபெற்றது ஜேசிஐ இந்தியாவின் வழிகாட்டுதலின் பேரில்  ஜேசிஐ மன்னை கிளையால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ  மாணவிகளுக்கான அகில இந்திய திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு இந்தியா முழுவதும், ஒரேநாளில், ஒரே நேரத்தில், மாணவர்களின் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் தேர்வாகும்.

இத்தேர்வில், மன்னார்குடி  தேசிய மேல்நிலைப்பள்ளி, எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தெப்பக்குளம் புனித ஜோசப்  உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள்  கலந்து கொண்டு தேர்வு எழுதினர். நிகழ்ச்சிக்கு ஜேசிஐ மன்னை தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.  தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவித் தலைமையாசிரியர் திலகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்