×

திருமாவளவன் பிறந்தநாளையொட்டி பனை விதை சேகரிக்கும் பணியில் விசி கட்சியினர்

திருவாரூர், ஆக.14: விசி கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை விதைக்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வி.சி கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிக்காக அதற்கான விதைகளை சேகரிக்கும் பணியில் அவர் உட்பட மாநிலம் முழுவதும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் விதைகளை விதைப்பதற்காக விதை சேகரிக்கும் பணியில் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் மற்ற கட்சியினர் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து வடிவழகன் கூறுகையில்,  ஆற்றங்கரைகள், குளக்கரைகள் மற்றும் சாலை ஓரங்களில் வரும் 17ம் தேதியன்று 5 ஆயிரம் விதைகளை விதைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக விதை சேமிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு