×

மக்கள் கோரிக்கை தீண்டாமை ஒழிப்பு மாநாடு

நீடாமங்கலம்,ஆக.14: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா  மன்னார்குடி ஒன்றியம் பூந்தாளங்குடி தியாகி பக்கிரி மன்றத்தில் தீண்டாமை ஒழிப்பு 2வது மாநாடு முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாநாட்டை வாழ்த்தி மாவட்ட தலைவர் தாயுமானவன்,  ஒன்றிய தலைவர் திருஞானம், ஒன்றியகுழு தங்கவேலு,ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன், மற்றும் பலர் பேசினர். லட்சுமணன் தலைவராகவும்,ராமச்சந்திரன் செயலாளராகவும்,நடேஸ்கோஸ் துணைதலைவராகவும்,

கண்ணன் துணைச்செயலாளராகவும், பிரபாகர் பொருளாளராகவும் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.மத்திய அரசு வன்கொடுமை சட்டத்தை  உடனடியாக அமல் படுத்த வேண்டும்.சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த கொலைக்கு தமிழக அரசு உடனடியாக விசாரனை நடத்த வேண்டும்.தலீத் சமூகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...