×

கைலாசபுரம் பெருமாள் கோயிலில் 19ல் திருக்கல்யாண உற்சவம்

திருச்சி, ஆக.14: திருச்சி  பெல் நகரியம் கைலாசபுரத்தில் உள்ள பத்மாவதி உடனுறை சீனிவாசப் பெருமாள்  கோயிலில் சிறப்பு திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 16ல் தொடங்கி 19ம் தேதி வரை  நடைபெறும். 16ம் தேதி இரவு 7 மணிக்கு வீராபுரம் சம்பத் தீட்சிதர்  நிகழ்த்தும் ருக்மணி கல்யாண சொற்பொழிவு, 17ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண  சொற்பொழிவு, 18ம் தேதி மாலை சீனிவாசர் திருக்கல்யாண சொற்பொழிவு நடை பெறும்.
19ம்  தேதி காலை பெருமாள் நவகலச திருமஞ்சனமும், மாலை 4 மணிக்கு நாம  சங்கீர்த்தனமும், மாலை 5 மணிக்கு சிறப்பு திருக்கல்யாண உற்சவமும்  நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேங்கடாசலபதி சேவா சமிதியினர் செய்து  வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு