திருச்சி, ஆக.14: திருச்சி பெல் நகரியம் கைலாசபுரத்தில் உள்ள பத்மாவதி உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 16ல் தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறும். 16ம் தேதி இரவு 7 மணிக்கு வீராபுரம் சம்பத் தீட்சிதர் நிகழ்த்தும் ருக்மணி கல்யாண சொற்பொழிவு, 17ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண சொற்பொழிவு, 18ம் தேதி மாலை சீனிவாசர் திருக்கல்யாண சொற்பொழிவு நடை பெறும்.
19ம் தேதி காலை பெருமாள் நவகலச திருமஞ்சனமும், மாலை 4 மணிக்கு நாம சங்கீர்த்தனமும், மாலை 5 மணிக்கு சிறப்பு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேங்கடாசலபதி சேவா சமிதியினர் செய்து வருகின்றனர்.