×

கருணாநிதி மறைவு பெல் தொமுச சார்பில் அமைதி ஊர்வலம்

திருச்சி, ஆக.14: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் கணேசபுரத்தில் இருந்து திருவெறும்பூர் வரை நடந்த அமைதி ஊர்வலத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் கணேசபுரத்தில் இருந்து திருவெறும்பூர் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பெல் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு