×

பேரக்குழந்தைகள் உயிர்தப்பினர் துறையூர்- திருச்சி சாலையில் ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து

துறையூர், ஆக.14: துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் ஆபத்தான வளைவில் சாலையோரம் உள்ள புளியமரத்தை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர்- திருச்சி சாலையில் புலிவலம் அருகில் அபாயகரமான வளைவு உள்ளது. அந்த இடத்தில் ஒரு புளியமரம் உள்ளது. துறையூரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் இந்த புளியமரத்தின் மறைவால் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாது.

இதனால் சற்று வலதுபுறம் சென்று திரும்பும்போது திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்தில் ஆண்டுக்கு 3 பேராவது பலியாகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு லாரி விபத்து ஏற்பட்டு 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதிகமான பேருந்துகள், சரக்கு வாகனங்கள் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் என போக்குவரத்து உள்ள இந்த சாலையில் ஆபத்தான புளியமரத்தை அப்புறப்படுத்தி சாலையை நேர்படுத்த நெடுஞ்சாலைதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு