×

மணப்பாறை அருகே தலையில் தேங்காய் உடைத்து 100 பக்தர்கள் நேர்த்திக்கடன்

மணப்பாறை, ஆக.14:  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ளது சென்னப்ப சுவாமி கோயில். இங்கு மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் இந்த கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ேநற்று காலை கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக கோயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது பூசாரி அங்கு வந்து வரிசையில் அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு