×

மாநகர் பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஆக.14: திருச்சி மாநகரில் இன்று சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். திருச்சி  மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம்,  பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், ஜீயபுரம், பிராட்டியூர்  கூட்டு குடிநீர் திட்ட நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்கு மின் வினியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரமின்  பராமரிப்பு பணி இன்று (14ம் தேதி) நடக்கிறது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை,  

விறகுபேட்டை, டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை, சிந்தாமணி,  ெபரியார்நகர், கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர்,  புத்தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட் ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை,  தெற்கு ராமலிங்கநகர், ஆல்பா நகர், பாத்திமாநகர், கருமண்டபம், காஜாமலை  காலனி ஆகிய பகுதிகளிலும், பிராட்டியூர் குடிநீர் திட்டத்தில் அடங்கும்  ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெயநகர்  மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர்  வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு