×

பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு மக்கள் குறைதீர் கூட்டம் : 350 மனுக்கள் குவிந்தது

திருச்சி, ஆக.14: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 350 மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள்,

இதர சான்றுகள், நிலம் தொடர்பான 73 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 3, பல்வேறு உதவித் தொகை கோரி 27 மனுக்கள் உள்பட 350 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டிஆர்ஓ சங்கரநாராயணன் (பொ), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) பழனிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...