×

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

சாத்தூர், ஆக. 14:சாத்தூர் அருகே, தந்தைக்கும் தம்பிக்கும் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகே, நத்தத்துபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பரமசிவம் (28). இவருக்கு லட்கமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பரமசிவம் வேலைக்கு போகாமல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு செய்தபோது, மாரிமுத்துவும், அவரது இளையமகனும் பரமசிவத்தை கண்டித்துள்ளனர். அப்போது  இது என்னுடைய குடும்ப விஷயம், தலையிட நீங்கள் யார் என பரமசிவம் கேட்டு இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இருக்கன்குடி போலீசில் மாரிமுத்து புகார் தெரிவித்தார். இதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து பரமசிவத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...