×

க்ரைம் செய்திகள் கார் மோதி ஒருவர் பலி

விருதுநகர்: பழநியை சேர்ந்தவர் நாகராஜ் (46). விருதுநகர் அருகே மீசலூர் அழகாபுரியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை ஊர் திரும்பினார். விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற கார் நாகராஜ் மீது மோதியது. படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரூரல் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

பெண் காவலர் காயம்
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, என்.மேட்டுபட்டி திருக்கண்ணில் சுவாமி, சில நிமிடங்களே நின்று அடுத்த திருக்கண்ணுக்கு புறப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சிலர் தேங்காயை தூக்கி எறிந்தனர். இதில் விருதுநகர் ஆயுதப்படை பெண் காவலர் சரவணச்செல்வி (35), மீது தேங்காய் விழுந்து காயமடைந்தார். காயமடைந்த அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...