×

ரவுடி சீசிங்ராஜாவின் தம்பி கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் பாபு (38). இவர் பிரபல ரவுடி, சீசிங்ராஜாவின் தம்பி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் சிட்லபாக்கம் பகுதியில் ஒரு சாலையோர தள்ளுவண்டி கடையில் தகராறில் ஈடுபட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாபுவை கைது செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பாபுவுக்கு பிரபல ரவுடி சூர்யா மூலம் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. பாபு அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் தான் சூர்யாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...