×

வணிகவரி துணை கமிஷனர் பொறுப்பேற்பு

திருப்பூர், ஆக.14: திருப்பூர் மாவட்ட வணிகவரித்துறை புதிய துணை கமிஷனராக சங்கரநாராயணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வணிக வரித்துறை துணை கமிஷனர்கள் 43 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட வணிக வரித்துறை, துணை கமிஷனராக பணியாற்றிய காஞ்சனா, தஞ்சை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, சேலத்தில் பணியாற்றி வந்த சங்கரநாராயணன், திருப்பூர் வணிக வரித்துறை துணை கமிஷனராக மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள், தொழில் துறையினர் வாழ்த்து கூறினர்.

Tags :
× RELATED பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் சாதனை