×

தரைப்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

தேனி, ஆக. 14: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 357 மனுக்கள் குவிந்தது. தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை கேட்டும்,  பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம். காவல்துறை தொடர்பாக 357 மனுக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு