×

கூலித்தொழிலாளி தற்கொலை

பெரியகுளம், ஆக.14: பெரியகுளம் அருகே வடுகபட்டி கன்னிமார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி(47). இவரது மனைவி பெத்தாச்சி(40). பால்பாண்டி கூலித்தொழிலாளியான இவர் அதிகமாக குடித்து விட்டு வருவதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி பெத்தாச்சி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கு மாட்டி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு