×

கான்கிரீட்டில் கண்மாய்கரை பொதுமக்கள் கோரிக்கை

தேனி, ஆக. 14: ஆண்டிபட்டி அருகே பி.தர்மத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், தர்மத்துப்பட்டியில் ஏழு சுணை கண்மாய் உள்ளது. மானாவாரியாக மழைக்காலங்களில் இக்கண்மாய் நிரம்பினால், தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, கொட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் ஊற்று கிடைக்கும். மேலும், குடியிருப்பு வீடுகளில் போர்வெல் கிணறுகளில் ஊற்று கிடைக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம், இக்கண்மாயில் நீர்நிரம்பும் போது கரை உடைந்து விடாமல் பலப்படுத்த கான்கிரீட்டாலான தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது