×

மூலனூரில் பெண் கொலை

வெள்ளக்கோவில்: மூலனூர் அருகே எரிசனம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சந்திரா. கூலி தொழிலாளி. இவர்களது மகன் கோபிநாத் (24). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரா, தனது மகன் கோபிநாத்துடன் தனியாக வசித்து வந்தார். இந் நிலையில், கடந்த 9ம் தேதி கோபிநாத்திடம் உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந் நிலையில், கடந்த 12ம் தேதி கோபிநாத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், சொறியங்கிணற்றுபாளையம் அருகே காட்டு பகுதியில் சந்திரா இறந்துகிடப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார். கோபிநாத் சென்று பார்த்தபோது சந்திரா இறந்துகிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது.  இதுகுறித்து கோபிநாத் கொடுத்த புகாரின்பேரில் வௌ்ளக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து கோபிநாத்துக்கு போன் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`சந்திராவின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலில் காயங்கள் உள்ளதா என பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியும். இது கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ