×

நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த யானை வீட்டை உடைத்து சூறையாடியது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அருகே நள்ளிரவில்  தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தோட்டத்து வீட்டின் சமையலறையை உடைத்து சூறையாடியது. பொள்ளாச்சியை அடுத்த சரளபதியில் உள்ள தோட்டத்துக்கு, அடிக்கடி காட்டு யானைகள் இரை மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த ஒற்றை ஆண் யானை, தனா என்பவர் வீட்டின் முன்கதவை உடைத்தது.

பின்னர் சமையல் அறை கதவை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த சமையல் பொருட்களை  சூறையாடியது.அந்நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை சேதப்படுத்திய யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தோட்டத்திற்குள் புகுந்த யானை, சுமார் இரண்டு மணிநேரம் அங்கேயே சுற்றித்திறிந்து அதிகாலையில் வனத்திற்குள் சென்றது.

இதையடுத்து நேற்று காலையில், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, யானையால் சேதமான வீட்டை பார்வையிட்டனர். இருப்பினும், மீண்டும் யானை புகாமல் தடுக்க, 5 பேர் கொண்ட தனிக்குழுவினர் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையிடம் டேன்டீ நிலம் ஒப்படைக்க முடிவு

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்