×

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஒத்திகை

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா நடக்கவுள்ளது. மைதானம் நேற்று போலீஸ் பாதுகாப்பில் மைதானம் ஒப்படைக்கப்பட்டது.  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை போலீசார் மைதானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர் .கோவை ரயில் நிலையத்தின் 6 பிளாட்பாரங்களிலும், பார்சல் பிரிவிலும் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று வ.உ.சி மைதானத்தில் போலீசாரின் சுதந்திர தின பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. விழா நடக்கும் பகுதியில் இன்று பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் வளாகத்தில் பொதுமக்கள் பார்க்கும் பகுதி, கலை நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அசம்பாவிதம் தடுக்க விடிய விடிய வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...