×

மூன்று திருமணம் செய்தவர் தற்கொலை

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமலை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (46). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். குடும்ப பிரச்னையால் இரண்டு மனைவிகள் பிரிந்து சென்று விட்டனர். ராதாகிருஷ்ணன் முதல் மனைவி தங்கமணியுடன் வசித்து வந்தார். மது போதையில் இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதை மனைவி கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கு போட்டு இறந்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கணபதி பூந்தோட்டம் நகரை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவர் மனைவி வனிதா (30). 7 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். வனிதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் வனிதா தனது கணவர், குழந்தைகளை விட்டு வாலிபருடன் சென்று விட்டார். 2 நாளுக்கு முன் அவர் மீண்டும் தனது கணவரை தேடி வந்தார். அப்போது அவரது உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த வனிதா தூக்கு போட்டு இறந்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு