×

ரூ.13.70 லட்சத்துக்கு வேளாண்பொருட்கள் விற்பனை

கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனை நடந்தது. இதில் 98 விவசாயிகள் 16 ஆயிரத்து 1  தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 794க்கு விற்பனையானது. இதேபோல் 12 ஆயிரத்து 940.5 கிலோ கொப்பரைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில் முதல் தரம் கொப்பரை அதிகபட்சமாக ரூ.104.89க்கும்,  குறைந்தபட்சம் ரூ.98.55க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சம் ரூ.98.30க்கும், குறைந்தபட்சம் ரூ.63.95க்கும் விற்பனையானது. இவை மொத்தம் ரூ.12 லட்சத்து 27 ஆயிரத்து 515க்கு விற்பனையானது. ஆக மொத்தம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரத்து 309க்கு வேளாண்பொருட்கள் விற்னை நடந்தது.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...