×

காவிரி வெள்ளம் பாதித்த பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாம்

கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள சத்திரப்பட்டி, மற்றும் கொடுமுடி இலுப்பைதோப்பு ஆகிய தாழ்வான இடங்களில் அமைந்துள்ள வீடுகளில் நேற்று முன்தினம் காவிரி வெள்ள நீர் புகுந்தது. தற்போது அந்த வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ளநீரினால் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

வருவாய் மற்றும் மருத்துவ துறையினர் இணைந்து நடத்திய இம்முகாமில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் வெள்ளம் பாதித்த சிற்றூராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குளோரின் கலந்த குடிநீரை மக்களுக்கு வழங்கவும், கொசு மருந்து அடிக்கவும், சாக்கடைகளை சுத்தம் செய்து அவற்றில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கவும், உள்ளாட்சி துறை நிர்வாகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...