×

பஸ் மோதி பெண் பலி

சிங்கம்புணரி, ஆக.14: சிங்கம்புணரி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி திருமலைகுமாரி(35). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜி(33), அவரது 4 மாத குழந்தை சிவானி, ஜனனி(7) ஆகியோர் ஒரே டூவீலரில் காளாப்பூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுகல்லில் இருந்து காரைக்குடிக்கு சென்ற அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் திருமலைகுமாரி படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் சிறு காயங்களுடன் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் நரசிங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்