×

டெங்கு ஆய்வுப் பணி

சிங்கம்புணரி, ஆக. 14: சிங்கம்புணரி அருகே, புதூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் உதரவின் பேரில், செட்டிகுறிச்சி பகுதியில் டெங்கு, சிக்கன்குனியா காய்சல் பரவுவது குறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் மற்றும் மருத்து அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் வீடுவீடாகச் சென்று, ‘மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகும் விதம், அவைகளை தடுக்கும் முறை குறித்தும்’ பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா