×

ராமாயண சொற்பொழிவு

மானாமதுரை, ஆக.14: மானாமதுரை குறத்தியம்மன் கோயிலில் ராமாயண தொடர் சொற்பொழிவு நடந்தது. சொற்பொழிவாளர் முத்துவடுகநாத சிவம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் குறித்தும், ஆசிரியர் மோகனசுந்தரம், ராமன், பொற்செல்வி ஆகியோர் ராமாயண காண்டங்கள் குறித்து சொற்பொழிவு ஆற்றினர். கோயிலுக்கு வந்திருந்த சிறுவர்கள் ராமாயண கதாபாத்திரங்களில் வேடங்கள் அணிந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை தர்ம ரக்ஷண சமிதியும் குறத்தியம்மன் கோயில் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்