×

பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியில் முதலிடம் பெறுவது பரமக்குடி.  இருப்பினும் இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் நகர் பகுதியிலிருந்து வெளியேறும்  கழிவுநீர் வைகை ஆற்றின் தெற்குப்பகுதியிலும், காட்டுப்பரமக்குடி, மணிநகர், பொன்னையாபுரம், கிருஷ்ணா தியேட்டர், சந்தைப்பேட்டை பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றின் வடக்கு பகுதியிலும் கலக்கிறது. எமனேஸ்வரம் வடக்கு, கிறிஸ்துவதெரு,

ஜீவா நகர், புதுநகர், மலையான்குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இடது பிராதான கால்வாயிலும் கலந்து வைகை ஆற்றை மாசுபடுத்துகிறது.  முதல்நிலை நகராட்சியான பரமக்குடியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்திற்கான சர்வே முடிந்துள்ளது. எனவே நகரின் சுகாதாரம் கருதி விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags :
× RELATED கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை