ராமநாதபுரம், ஆக.14: ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு வந்த கேரள வியாபாரி உயிரிழந்தார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தலைச்சேரி, பிளாக்கோல், ராபியாக பகுதியை சேர்ந்தவர் முகமது மகன் அன்வர்சாதிக்(48). டெக்ஸ்டையில் வியாபாரி. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை காண்பதற்காக வந்தார்.
விழா முடிந்து மறுநாள் காலையில் கேரளாவிற்கு திரும்ப வேண்டிய நிலையில் உடல் நிலை சரியில்லாமல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று மருந்துகளை வாங்கி சென்ற நிலையில் மாலையில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.