ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் நகல் பிரிவு கண்காணிப்பாளர்கள், நகல் பரிசோதகர்கள், தட்டச்சர்கள், நகல் எழுத்தர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மை நிர்வாக அலுவலர் வரதராஜன் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் செய்திருந்தனர்.