×

ஒருபோகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுகோள்

மதுரை, ஆக. 14: மதுரை மாவட்டம் கீழையூரை சேர்ந்த பாண்டிவேல் தலைமையில், விவசாயிகள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘எங்கள் பகுதிக்கு பெரியாறு ஆற்றில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு பருவ மழை நன்றாக பெய்துள்ளது. பெரியாறு அணை தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் எங்களது பகுதி விவசாயத்திற்கு வழக்கம் போல் ஆக.15ம் தேதி பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், இப்பகுதி பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக பொதுப்பணி துறை நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ பரிசீலனை செய்தார். 

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை