மதுரை, ஆக. 14: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மண்டல அளவிலான கோரிக்கை மாநாடு தொடர்பான ஆயத்த கூட்டம், மதுரையில் நடந்தது. டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் காலமுறை ஊதியத்தை உடன் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9ம் தேதி மண்டல அளவில் நடைபெறும் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இதில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அரசு பணியாளர் சங்க தலைவராக தனுஷ்ேகாடி, செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக விஜயகுருசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் மணவாளன், சத்தியமூர்த்தி, முனியசாமி உள்பட பலர் கலந்து கொ ண்டனர். நியாய விலைக்கடை மாநில துணைத்தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.