×

கருணாநிதி மறைவு பழநியில் திமுகவினர் மொட்டையடித்து அஞ்சலி

பழநி, ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். இதனையடுத்து நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. தமிழகத்தில் 7 நாட்கள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பழநி அருகே புளியம்பட்டியில் ஊராட்சி திமுக சார்பில் 16க்கும் மேற்பட்ட திமுகவினர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், புளியம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்