×

இன்று உஷார்... அப்புறம் அம்மிலதான் சட்னி அரைக்கணும்...

பட்டிவீரன்பட்டி, ஆக. 14: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்த மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் வழங்கும் பகுதிகளான பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பால்பாண்டி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு