×

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா

பட்டிவீரன்பட்டி, ஆக. 14: ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வரதராஜபெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வந்த வரதராஜபெருமாளை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கூடுதல்(பொறுப்பு) சந்திரசேகரன், தலைமை கணக்காளர் ராஜா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED பழநி நகரில் பல்வேறு இடங்களில்...