×

பெற்றோர் எதிர்ப்பால் விபரீதம் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை

சென்னை, ஆக. 14: பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருக்கழுக்குன்றம் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த எலுமிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரதிப்ராஜ் (19). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார். பிரதிப்ராஜும், சவுமியாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலமாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த காதலர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி நாம் வாழ்கையில் ஒன்றாக சேர முடியாது, மரணத்திலாவது ஒன்று சேருவோம் என்று எண்ணி தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரையும் காணவில்லையே என இரு வீட்டின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை.

இந்நிலையில் பாலாற்று பகுதியில் சென்றவர்கள் இரண்டு பேர் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது பற்றி ஊரில் உள்ளவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பாலாற்றில் யாரோ 2 பேர் இறந்து கிடக்கின்றனர் என்ற தகவலை கூறினர். அதன் பின்னர் இறந்து கிடந்தவர்களை பற்றி கேள்வி பட்டு நேற்று காலை பிரதிப்ராஜ், சவுமியா உறவினர்கள் பாலாற்று பகுதிக்கு வந்து பார்த்துள்ளனர். இறந்து கிடந்தது பிரதிப்ராஜ், சவுமியா தான் என்பதை உறுதி செய்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் கடுமையான துர்நாற்றம் வீசியது. அருகில் பூச்சி மருந்து பாக்கெட் கிடந்தது. காதல் ஜோடியின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...