×

ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி, ஆக. 14: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை ேபாதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, அதில் வந்த இருவர், தங்களது பையில் 12 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் கருக்கம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (44), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...