×

திருத்தணியில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

திருத்தணி, ஆக.14: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வரும் 25ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று, வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவரும் தலைவர் பூரண நலம் பெற்று நாடு திரும்பும் வகையில் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்க ேவண்டும். அதுமட்டுமின்றி தேமுதிக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கல்வெட்டுகள் திறக்க வேண்டும்.

அடுத்தமாதம் 15ல் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், சத்யா, செயற்குழு உறுப்பினர் ஞானமூர்த்தி, பொருளாளர் சேகர், துணை செயலாளர்கள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், முனிரத்தினம், சியாமளா, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ்பாபு, சுப்பிரமணி, தர், திருத்தணி நகர செயலாளர் தாமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்