×

தூய்மை கணக்கெடுப்பு வாரம்

திருவள்ளூர், ஆக. 14: பூண்டி ஒன்றியம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை கணக்கெடுப்பு வாரம் நேற்று முன்தினம் நடந்தது. பேரணிக்கு பூண்டி பிடிஓ கிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல துணை பிடிஓ வடிவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கோபி வரவேற்றார்.

ஊராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கோஷமிட்டனர். யிரினங்களுக்கும், மண்ணுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...