×

கல்லூரி மாணவரிடம் செயின் பறிப்பு

பூந்தமல்லி, ஆக.14: சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரோகித்குமார்(19), தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் ரோகித்குமார் அருகில் சென்று “தம்பி உன்னை சிலர் பின் தொடர்ந்து வருகிறார்கள்” கழுத்தில் அணிந்துள்ள செயினை கழற்றி பையில் வைத்துக்கொண்டு செல்” என்று கூறி உள்ளார்.

இதனை நம்பி ரோகித்குமார் தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த செயினை ஒரு பேப்பரில் மடித்து ரோகித்குமாரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சிறிது தூரம் சென்று பேப்பரை பிரித்து பார்த்தபோது செயின் இல்லாமல் செங்கல் பொடி கற்கள் இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...