×

நால்வர் நற்றமிழ் மன்ற ஆண்டுவிழா

காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றத்தின் நாற்பதாம் ஆண்டு விழா ஐம்பெரும் விழாவாக சின்னகாஞ்சிபுரம் கலைவாணி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. நால்வர் நற்றமிழ் மன்றம் 40ம் ஆண்டு விழா, ஓதுவார்க்கு விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக்கும் விழா, குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் என ஐம்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பனப்பாக்கம் வேலாயுதனார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருமுறைகளில் பஞ்சசபைகள் என்ற குறுந்தகட்டை காஞ்சிபுரம் லட்சுமி மருத்துவமனை சாம்பமூர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர் கணேஷ், ஜோதிடர் பார்த்தசாரதி, கணேசன், பரமசிவம்,

ராமலிங்கம் , சரவணன் உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர். நற்றமிழ் இசைவேந்தர் எனும் விருதை திருவையாறு தேவார பாடசாலை ஆசிரியர் சுவாமிநாதன் ஓதுவாருக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் வழங்கினார். இந்த விழா நிகழ்ச்சிகளில் மன்ற சிறப்புத் தலைவர் சந்திரசேகரன், சொற்பொழிவாளர்கள் அமுத.இளவழகன், ஐ.கே.சுப்பிரமணின், நடராசன், அருணை.பாலறாவாயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...