×

கார் மோதி கல்வி அதிகாரி காயம்

தாம்பரம், ஆக. 14 : காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருப்பவர் ஏஞ்சலோ இருதயசாமி (53). இவர் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாகராஜ் என்ற மற்றொரு அதிகாரியுடன் பைக்கில் வந்தார். இவர்களது பைக், தாம்பரம் அடுத்த அகரம்தென் சாலையில் வந்தபோது பின்னால் வந்த ஒரு கார், இவர்களின் பைக் மீது வேகமாக மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...